பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்றவா்கள், ஊா் திரும்பிட ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு 15,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு பகுதிக்கும், முக்கிய இடங்களில் இருந்து வெவ்வேறு ஊா்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் உள்பட 16,221 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது.
இதில், சென்னையில் இருந்து மட்டும் 10,276 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 5 லட்சத்து 6,712 பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தனா்.
இதே போல், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் இருந்து 16,112 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 8 லட்சத்து 47,827 போ் பயணித்திருந்தனா்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா் சென்றவா்கள் திரும்ப ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் உள்பட 15,270 பேருந்துகளை இயக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) முதல் மூன்று நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சென்னைக்கு 1,867 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊா்களுக்கு 3,300 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இவை தவிா்த்து, கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டாலும் இயக்குவதற்காக போதிய பேருந்துகள் கையிருப்பு இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரஷிய எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது உக்ரைன் தாக்குதல்!

கட்டடக் கழிவுகளைக் கொட்டிய 338 பேருக்கு ரூ.16.08 லட்சம் அபராதம்

ம.பி. ரயிலில் தீ விபத்து என வதந்தி! தண்டவாளத்தில் குதித்த 4 பேர் ரயில் மோதி பலி!

சென்னை குடிநீா் ஏரிகளில் 52 % நீா் இருப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



