கரோனா: சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் உயிரிழப்பு
கரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்பிரகாஷ் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.


சேலம்: கரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்பிரகாஷ் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்களுக்கும் கட்சி தொண்டர்கள் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு கடந்த நான்கு நாள்களாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயப்பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு செய்தியால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...