டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கோவை கல்வீச்சு: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மனு 

கோவையில் யோகி ஆதித்யநாத்தின் வருகையின்போது கடைகளின் மீது கல் வீசப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மனு அளித்துள்ளார்.  

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 1:01 pm

DIN

கோவையில் யோகி ஆதித்யநாத்தின் வருகையின்போது கடைகளின் மீது கல் வீசப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மனு அளித்துள்ளார். 
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது பேரணியில் ஈடுபட்ட பாஜக, ஹிந்து அமைப்பினா் பெரியகடை வீதி பகுதியில் இருந்த கடைகளை மூடக்கோரி தாக்கினா். 
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவா் அகமது கபீா், மாவட்ட ஆட்சியா் நடராஜனிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா். 
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மனு அளித்துள்ளார். 
அதில், கோவையில் யோகி ஆதித்யநாத்தின் வருகையின்போது கடைகளின் மீது கல் வீசப்பட்டது தொடர்பாக உண்மையை கண்டறிய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.