டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கோடை வெயில்: வேலூரில் காலையிலேயே வாக்களிக்க மக்கள் ஆர்வம்

கோடை வெயில் காரணமாக வேலூரில் காலையிலேயே வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் திரண்டிருந்தனர்.

News image
கோடை வெயில்: வேலூரில் காலையிலேயே வாக்களிக்க மக்கள் ஆர்வம்
Updated On :6 ஏப்ரல் 2021, 2:35 am

DIN

வேலூர்:  கோடை வெயில் காரணமாக வேலூரில் காலையிலேயே வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் திரண்டிருந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே அதிகபட்சம் 110 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் செவ்வாய்க்கிழமை  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவின் போதே அதிகப்படியான வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் திரண்டிருந்தனர். அவர்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணமுடிந்தது. அதேசமயம், கரோனா தடுப்புக்காக வாக்குச்சாவடிகளில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் ஏற்படுத்தப் பட்டிருந்தன.

Story image



அவற்றை பின்பற்றுவதில் முதியவர்கள் சற்று சிரமம் அடைந்தனர். குறிப்பாக கைகளுக்கு உறை அணிந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கையுறைகளை அணிந்து கொள்வதில் முதியவர்கள் தடுமாற்றம் அடைந்தனர். உதவியாளர்கள் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோடை வெயில் காரணமாக பகல் 11 மணிக்கு மேல் கடுமையான வெப்பம் நிலவும். இதன் காரணமாகவே காலையிலேயே அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களிக்க வந்துள்ளனர். மேலும் கடந்த தேர்தலை காட்டிலும் இந்தத்தேர்தல் புதுமையானது.

புதியவர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்புகள் தொடங்குவதற்கான சூழலும் உள்ளது. அதனாலேயே மக்கள் அதிகளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கை முறையாக பின்பற்றப்படுவது வரவேற்கத்தக்கது. எனினும் முதியவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அது தவிர்க்க இயலாதது தான் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.