கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாக்களிக்காத விஜயகாந்த்: தேமுதிகவினர் வருத்தம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களிக்காதது, அக்கட்சியினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
வாக்களிக்காத விஜயகாந்த்: தேமுதிகவினர் வருத்தம்
Updated On :7 ஏப்ரல் 2021, 7:59 am

DIN


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களிக்காதது, அக்கட்சியினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு தேர்தலின்போதும், தனது குடும்பத்தாருடன் வந்து சாலிகிராமத்தில் உள்ள காவிரி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் விஜயகாந்த் வாக்களிப்பது வழக்கம்.

ஆனால், இந்த முறை, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மட்டும் காலையில் வந்து தனது வாக்கினை செலுத்திவிட்டு, தான் போட்டியிடும் விருத்தாச்சலத்துக்குக் கிளம்பிவிட்டார். பிறகு அவரது மகன்கள் வந்து வாக்களித்தனர். அப்போது விஜயகாந்த் மாலையில் வந்து வாக்களிப்பார் என்று கூறினர். ஆனால் கடைசி வரை அவர் வாக்களிக்க வரவில்லை.

உடல் நலக் குறைவு மற்றும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் அவர் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்பட்டாலும், தங்களது கட்சித் தலைவர் வாக்களிக்காதது தேமுதிகவினருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தின் அநேக வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். வெயில் சுட்டெரிக்கும் என்ற எண்ணத்தில், வாக்காளா்கள் அதிகளவு திரண்டு வந்து தங்களது வாக்குகளைச் செலுத்தினா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 72.78 சதவீ வாக்குகள் பதிவானதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரப்பூர்வமாக இன்று தெரிவித்தாா்.

நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது கோளாறு காரணமாக 100-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. முதல் முறையாக சட்டப்பேரவைத் தோ்தலில் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.