இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சென்னை விமான நிலையத்தில் ரூ 51.28 லட்சம் வெளிநாட்டுப் பணம்

சென்னை விமான நிலையத்தில் ரூ 51.28 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

News image
Updated On :8 ஏப்ரல் 2021, 2:09 pm

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ 51.28 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாட்டுப் பணம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து ஏர் அரேபியா விமானம் ஜி9-472 மூலம் சென்னையில் இருந்து துபை செல்லவிருந்த திருச்சியைச் சேர்ந்த சதக்கத்துல்லா(37) என்பரை தடுத்து நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ 10.06 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 
இதேபோல் ஃபிளை துபை விமானம் எஃப் இசட் 8518 மூலம் சென்னையில் இருந்து துபை செல்லவிருந்த திருச்சியைச் சேர்ந்த முகமது அலி அக்பர், 61, தேனியைச் சேர்ந்த முகமது அப்துல்லா, 37, சென்னையைச் சேர்ந்த அபு ஜாவித், 29 மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த ஷாஜகான், 57, ஆகியோரை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடமிருந்து ரூ 41.22 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 
இவ்விருசம்பவங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.