தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர் கனமழை

கடந்த சில தினங்களாக எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடும் வெயில் வாட்டிய நிலையில், திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்துள்ளது.

News image

செவ்வாய் அன்று இரவு பலத்த காற்றுடன் பேய்த கனமழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் வயல்வெளியில் சாய்து கிடக்கும் சோளப்பயிர்கள், இடம்: எடப்பாடி அடுத்த கல்ல பாளையம்

Updated On :14 ஏப்ரல் 2021, 5:33 am

DIN

கடந்த சில தினங்களாக எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடும் வெயில் வாட்டிய நிலையில், திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்துள்ளது.

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான வெள்ளரிவெள்ளி, சித்தூர், கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய் அன்று இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

சுமார் 2 மணி நேரம் வரை விட்டுவிட்டு கனமழை கொட்டியது. இதனால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. இதேபோல திங்கள் மாலையும் இப்பகுதியில் கனமழை பெய்துள்ளது.

கோடையின் மையப்பகுதியில் பெய்துவரும் இந்த தொடர்மழை விவசாயப் பணிகளுக்கு சாதகமாக அமையும் என்றும் அடுத்து வரும் சில தினங்களில் இப்பகுதியில் மழைபெய்யும் நிலையில் கோடை உழவு செய்திட ஏதுவான சூழல் ஏற்படும் என இப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.