தேர்தலை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதால், ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது, சட்டமன்ற தேர்தல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், தமிழகத்தில் 6 மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே புதிய தமிழகம் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில பொதுச் செயலர் விகே அய்யர் தலைமை வகித்தார். மாவட்ட செயலர்கள் கனகராஜ், மன்சூர் அலி, செல்லத்துரை, நகர செயலாளர் ரமேஷ் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...