தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகமாக உள்ளது.
நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதோடு, கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18, 692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மாநிலத்தில் கரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11,66,756 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பான மறுஉத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...