மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

தமிழகத்தை பிரிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு விளக்கம்

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் விளக்கம் அளித்துள்ளார்.

News image

தமிழகத்தை பிரிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு விளக்கம்

Updated On :3 ஆகஸ்ட் 2021, 7:19 am


புது தில்லி: தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல். முருகனின் சுய விவரக் குறிப்பில் கொங்குநாடு என்ற வார்த்தை இடம்பெற்றிருந்த நிலையில், அது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை எம்பிக்கள் பாரிவேந்தர் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம், கொங்குநாடு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.