47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தொடக்கம்

புதுச்சேரியில் 75 வது சுதந்திரதின விழாவையொட்டி, 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. துணை நிலை ஆளுநர், முதல்வர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

News image
புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தொடக்கம்
Updated On :3 ஆகஸ்ட் 2021, 5:54 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் 75 வது சுதந்திரதின விழாவையொட்டி, 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. துணை நிலை ஆளுநர், முதல்வர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75 வது சுதந்திர திருநாளை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்னும் பெயரில் 75,000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா புதுச்சேரி அருகே பாகூர் கொம்யூனில் உள்ள மனப்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. 

Story image

மனப்பட்டு வனத்துறை தோட்டத்தளத்தில், நடைபெற்ற மரம் நடும் விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழசை சௌந்திரராஜன், முதலமைச்சர் என். ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நல அமைப்புகள் பங்கேற்க, மர கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

 இந்த விழாவில் 13,250 மரக்கன்றுகள் நடப்படுகிறது. அதைத்தொடர்ந்து புதுச்சேரி முழுவதும் மொத்தமாக 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.