தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, கடலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டமான மூன்றாம் பாலினர் நலன் திட்டத்தில் தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்ப அட்டை பெறாத, வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள மற்றும் அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முதற்கட்டமாக கோவிட்- 19 நிவாரண நிதியுதவி 353 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.7,06,000 (ரூபாய் ஏழு இலட்சத்து ஆறாயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீட்டில் 238 மூன்றாம் பாலினத்தவர்கள் பயன் பெற்றுள்ளார்கள்.