ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மக்களைத் தேடி மருத்துவம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 

News image
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்திற்கான வாகனங்களை வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.
Updated On :28 ஜனவரி 2024, 3:50 am

DIN


கோவை: கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 

Story image

தமிழகத்தில் தோற்றா நோயாளிகளுக்கு வீடு தேடி மருந்துகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவ என்ற திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோவை, சென்னை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 7 மவட்டங்களில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். 

Story image

முதலாவதாக கோவையில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து சென்னை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

Story image

கோவையில், நஞ்சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவ திட்டத்திற்கான வாகனங்களை வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.

Story image

நிகழ்ச்சியில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, சுகாதாரத் துறை துணை இயக்குநர் எஸ்.செந்தில்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் ராஜா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகள் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.