நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவு

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவு
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவு


சென்னை: மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும், குறைந்தபட்சமாக  ராமநாதபுரத்தில் 9 பேரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து இதுவரை ஒரு அரசுப் பள்ளி மாணவரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com