சென்னை: மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 9 பேரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து இதுவரை ஒரு அரசுப் பள்ளி மாணவரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.