ஆடி அமாவாசை: சென்னையில் நீர்நிலைகளுக்குச் செல்லத் தடை

ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  
ஆடி அமாவாசை: சென்னையில் நீர்நிலைகளுக்குச் செல்லத் தடை

ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து பெருநகர சென்னை காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை (08.08.2021) கடற்கரை, கோயில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக அறிவிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், கரோனா நோய் தொற்று பரவுவதலை தடுக்க, 10.05.2021 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது, சில தளவுர்களுடன் கூடிய கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களான முகக்கவசம் அணிதல், திரவ சுத்திகப்பான் பயன்படுத்துதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட நடைமுறைகளை கடைபிடிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு, தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்காத நபர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், அதிக அளவு பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் 23.8.2021 வரையிலுள்ள வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதித்து தமிழக அரசு நேற்று (06.8.2021) அறிவித்துள்ளது. 

மேலும், நாளை (08.8.2021) ஆடி அமாவாசை என்பதால், கோயிலுக்கு செல்வதற்காகவோ, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவோ, சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு முதல், திருவான்மியூர், எலியட், மெரினா, அண்ணாசதுக்கம், திருவொற்றியூர், எண்ணூர் வரையிலான கடற்கரை, கோயில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கோரப்படுகிறது.
கரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் நாளை (08.8.2021) கடற்கரை, கோயில் குளங்கள் மற்றும் நீர் நிலைகள் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்து, தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைக்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com