கம்பம்: தேக்கடி ஏரியில் படகு சவாரி திங்கள்கிழமை முதல் தொடங்கியது, அனுமதி கட்டணமும் குறைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டம் அருகே உள்ளது கேரள மாநிலம் தேக்கடி ஏரி, உலக அளவிலான சுற்றுலா மையமான தேக்கடி ஏரியில் சிறப்பு அம்சம் படகுச்சவாரி. இதர சிறப்புகளான மலையேற்றம், யானை சவாரி உள்ளிட்டவை, சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும்.
நாள்தோறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து போகும் இடமாக தேக்கடி ஏரி விளங்கியது.
கரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலா தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் தேக்கடி ஏரியில் படகு சவாரி நடைபெறவில்லை.
சுமார் 100 நாள்களுக்குப் பிறகு தேக்கடி ஏரியில் படகு சவாரி திங்கள்கிழமை முதல் தொடங்கியது, மொத்தம் 5 டிரிப்புகள் இயக்கப்பட உள்ள நிலையில், காலை 7:00 மணிக்கு முதல் டிரிப்பும், இரண்டாவது டிரிப் 9 மணிக்கு இயக்கப்பட்டது முதல் பயணத்தில் 21 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
சுற்றுலாத் துறையினர் அவர்களிடம் கரோனா நெகடிவ் சான்றிதழ், இரண்டு அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் இ பாஸ் அனுமதி போன்ற சான்றிதழ்களை ஆய்வு செய்த பின்பு படகு சவாரிக்கு அனுமதி தந்தனர்.
கடந்த ஆண்டு தேக்கடி படகு சவாரிக்கு நுழைவு கட்டணம், ஆனவாச்சல் வாகன நிறுத்தத்திலிருந்து தேக்கடிக்கு செல்ல பேருந்து கட்டணம் மற்றும் படகு சவாரிக்கான கட்டணம் என மொத்தம் ரூபாய் 500 வசூலிக்கப்பட்டது.
தற்போது 200 ரூபாய் குறைக்கப்பட்டு கேரள சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் 300 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர். இந்த கட்டண குறைப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாலைத் தடுப்பில் மோதி இரண்டாகப் பிளந்த பேருந்து: ஒருவர் பலி; 26 பேர் காயம்
ஓடிடியில் நூறு சாமி எப்போது?

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு

பனிமய மாதா பேராலயத் திருவிழா! கொடியேற்றத்துடன் துவக்கம்! | Thoothukudi
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



