
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நாளை முதல் (ஆக. 25) பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை, சுற்றுலா தளங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் நாளை முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் திறக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.