தாமிரவருணி முதல் மடை பாசனத்தில் தண்ணீர் கிடைக்காததால் காய்ந்துபோன நெற்பயிர்கள்: ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்
வாகைக்குளம், மன்னார்கோவில் பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பாசனத்திற்கு முறையாகத் தண்ணீர் கிடைக்காமல் நெற்பயிர்கள் கருகியதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.











