/

குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி’ விருது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

குழந்தை எழுத்தாளர்களுக்கு 'கவிமணி' விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருகிறார்.

News image
குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி’ விருது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
Updated On :28 ஜனவரி 2024, 4:00 am

DIN

குழந்தை எழுத்தாளர்களுக்கு 'கவிமணி' விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருகிறார்.

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆக -26 )  சட்டசபையில் நடைபெற்றது. இதில் தொழிற்கல்வி பயிலும் அரசு மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

பின் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குழந்தை எழுத்தளார்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு ‘கவிமணி’விருது வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஆண்டு தோறும் 18 வயதிற்கு உட்பட்ட 3 எழுத்தாளார்களை தேர்வு செய்து  அவர்களுக்கு  ரூ.25,000 ரொக்கமும் , சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும் எனவும்  அறிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.