எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புகழ்ந்து பேசினால் நடவடிக்கை: திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் தன்னைப் புகழ்ந்து  பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்எல்ஏக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
புகழ்ந்து பேசினால் நடவடிக்கை: திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
Updated On :28 ஆகஸ்ட் 2021, 11:13 am

DIN


சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தன்னைப் புகழ்ந்து  பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்எல்ஏக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையின் நேரம் கருதி, தன்னைப் புகழ்ந்து பேசுவதை திமுக எம்எல்ஏக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்றே கூறியிருந்த நிலையில், இன்றும் அது தொடர்ந்ததால்,  நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீது பேசிய திமுக எம்எல்ஏ ஐயப்பன், முதல்வர் ஸ்டாலின் குறித்து புகழ்ந்து பேசிக் கொண்டிருந்த போது, குறுக்கிட்டுப் பேசிய முதல்வர், பேரவையில் தன்னைப் புகழ்ந்து பேசுவதைக் குறைத்துக் கொள்ளவில்லை என்றால் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், எதையும் லிமிட் ஆக வைத்துக் கொள்ளுங்கள். நேற்றே இது பற்றி கட்டளையிட்டேன். திமுக எம்எல்ஏ ஐயப்பன் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்டாலின் கூறினார்.
 

YouTube video thumbnail

எப்போதும் புகழ்ச்சி வேண்டாம்..

எப்போதும் புகழ்ச்சி உரைகளைக் கூற வேண்டாமென அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். சட்டப்பேரவையிலேயே அவர் இதனைப் பதிவும் செய்தார்.

சட்டப்பேரவயில் சட்டத்துறை தொடர்பான மசோதாவை அந்தத் துறையின் அமைச்சர் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். மசோதா தாக்கலுக்கு முன்பாக அவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரையும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர், கேள்வி நேரம், சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய முன்வரும்போது நேரடியாக விஷயத்துக்கு வர வேண்டும். மானியக் கோரிக்கையில் பேசும் போதோ, பதிலளிக்கும்போதோ தங்களை ஆளாக்கிய, உருவாக்கிய தலைவர்களை நினைவுகூர்ந்து பாராட்டிப் பேசலாம். எனவே, கேள்வி நேரம், சட்ட மசோதா தாக்கலின்போது இதனைச் செய்யக் கூடாது. இது தான் எனது கண்டிப்பான வேண்டுகோள். அமைச்சர்களும் திமுக உறுப்பினர்களுக்கும் இதுதான் எனது கட்டளை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.