மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தடுப்பூசி செலுத்தாதோர் பொது இடங்களுக்கு செல்லத் தடை: நாமக்கல்லில் அமல்

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாதோர் பொது இடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :6 டிசம்பர் 2021, 10:18 am

DIN

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாதோர் பொது இடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் கரோனா வகை நோய்த் தொற்றின் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாத மக்கள் திரையரங்கு, பூங்கா, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கரோனா விதிமுறைகளை மீறும் பொதுமக்கள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாதோருக்கு பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.