ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

நைஜீரியாவிலிருந்து வந்தவர் உள்பட 7 பேருக்கு ஒமைக்ரான் பரிசோதனை: மா. சுப்ரமணியன்

தமிழகத்தில் 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்குமோ என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது என திருச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

News image

நைஜீரியாவிலிருந்து வந்தவர் உள்பட 7 பேருக்கு ஒமைக்ரான் பரிசோதனை: மா. சுப்ரமணியன்

Updated On :14 டிசம்பர் 2021, 12:53 pm IST

திருச்சி : நைஜிரியாவிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கும் அவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருக்குமோ என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது என திருச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் கோவிட் நுரையீரல் மறுவாழ்வு மையம் மற்றும் புற்றுநோய் உள்நோய் மையம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாக துறை கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கபட்ட 142.5 மெட்ரிக் டக் ஆக்ஸிஜன் சேமிப்பு கலன்  திறக்கப்பட்டுள்ளது. இது திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் பெரிய வசதியானதாக இருக்கும்.

மேலும் படிக்க.. நிலவில் மர்ம வீடு!

தி.மு.க அரசு பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டில் 220 மெட்ரிக் டன் மட்டும் கையிருப்பு இருந்தது. தமிழக முதலமைச்சர் எடுத்த சீரிய நடவடிக்கையால் 1000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான அளவில் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது அரசிடம் 25,660 ஆக்சிஜன் உருளைகள்,  70 பி.எம் கேர் நிதியிலிருந்து கட்டப்பட்ட ஆக்ஸிஜன் ஆலைகள், 94 தனியார் பங்களிப்போடு கூடிய ஆக்சிஜன் ஆலைகள், 241 ஆக்சிஜன் ஆலைகள் அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு ஆக்ஸிஜன் ஆலைகள் இல்லை.

அரசு மருத்துவமமைகளில் அனுமதிக்கப்படும் 50 வயது மேற்பட்டோருக்கு புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான வசதிகள் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படும் அனைவருக்கும் இந்த பரிசோதனை கட்டாயமாக மேற்கொள்ளப்பட உள்ளது. திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அந்த வசதியை இன்று தொடங்கி உள்ளோம்.

அதே போல நீண்ட நாள்கள் படிக்கையில் படுத்திருப்பவர்களுக்கு படுக்கை புண்  நோயால் பாதிக்கப்படுவார்கள். அதற்காக அரசு மருத்துவமனைகளில் 10 பிரத்யேக படுக்கை வசதிகள் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் 69 அரசு மருத்துவமனைகளில் 79 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வசதிகள் உள்ளது. அதன் மூலம் நாளொன்றுக்கு 1,88,500 பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். தற்போது  கூடுதலாக 20 ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மையங்கள் அமைத்துள்ளோம்.

Story image

இரண்டு நாள்களுக்கு பின் நைஜிரியாவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த 47 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கும்  அவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் எஸ்-ஜீன் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அவர்களின் மாதிரிகள் பெங்களூருக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் பரிசோனை முடிவுகள் இன்று மாலையோ அல்லது நாளையோ தெரிய வரும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செளந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, அப்துல் சமது, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.