ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தனியார் தேங்காய் நார் மில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம்

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான நார் மில் வேன் கவிழ்ந்து 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர். 

News image
காட்டுப்புத்தூர் அருகே விபத்துக்குள்ளான தனியாருக்கு சொந்தமான நார் மில் வேன்.
Updated On :18 டிசம்பர் 2021, 8:17 am

DIN

முசிறி: திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான நார் மில் வேன் கவிழ்ந்து 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசார் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காட்டுப்புத்தூர் அருகே கிடாரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் மில் இயங்கி வருகிறது.

இந்த மில்லில் தொட்டியம் காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இவ்வாறு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் பேருந்தில் அழைத்து சென்று பணி முடிந்தவுடன் திரும்ப கொண்டுவந்து விடுவது வழக்கம். இவ்வாறு பணிக்கு சென்றுவிட்டு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து காடுவெட்டி அருகே ஓட்டுநர் சதீஷ்குமார் ( 38) என்பவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பணிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த கூன் ராக்கம்பட்டி சேர்ந்த  புவனேஸ்வரி, தொட்டியபட்டி சேர்ந்தவர்களான சந்திரா,சரசு, சத்யா, மஞ்சுளா, பெரும்மாமா, கங்கா, காசி ஆகிய 8 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், சந்திரா, சரசு மஞ்சுளா, பெரும்மாமா ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.