போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: இளைஞர் தற்கொலை

பொன்னமராவதியில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


புதுக்கோட்டை:  பொன்னமராவதியில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இன்ஸ்டாகிராமில் சிறுமிகளின் புகைப்படங்களை பாலியல் நோக்கில் நண்பர்களுக்கு பகிர்ந்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இளைஞரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள அவமானம் தாங்காமல் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com