மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆய்வு மேற்கொள்ளும்போதே நிலஅதிர்வை உணர்ந்தோம்: மாவட்ட வருவாய் அலுவலர்

ஆய்வு மேற்கொள்ளும்போதே சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :25 டிசம்பர் 2021, 11:51 am

DIN

ஆய்வு மேற்கொள்ளும்போதே சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கெனவே 4முறை காலையில் நிலஅதிர்வு உணரப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. 
நிலஅதிர்வு ஏற்படக் காரணம் என்ன என்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், நிலஅதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். 

நில அதிர்வால் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்தவர்களை முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆய்வு மேற்கொள்ளும்போதே சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் என்றார்.
வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே நவ.29 மற்றும் டிச.23ஆம் தேதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.