
பாஜக நிதி திரட்டும் திட்டம்: ரூ.1,000 வழங்கிய பிரதமர் மோடி
புது தில்லி: வாஜ்பாயியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜகவின் சிறப்பு சிறு நிதியுதவி திரட்டும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் உள்ளிட்டவர்களிடம் சிறு தொகையை வசூலிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஏராளமான பாஜக தலைவர்கள் நிதி வழங்கினர்.
இதையும் படிக்க.. கதையல்ல.. நிஜம்: மாதம் ரூ.20,000 சம்பாதிக்கும் சூரத் சிறைக் கைதிகள்
இது குறித்து நரேந்திர மோடி தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, பாஜக கட்சி நிதிக்கு நான் ரூ.1,000 வழங்கியுள்ளேன். பாஜக வலுவாக உதவி செய்யுங்கள். இந்தியா வலுவாக உதவுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிதி திரட்டும் திட்டம், பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.