மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிவகாசி: தடைசெய்யப்பட்ட நெகிழிப்பையைத் தயாரித்த ஆலைக்கு சீல்

சிவகாசி அருகே தடைசெய்யப்பட்டுள்ள நெகிழிப்பை தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சிவகாசி வட்டாட்சியர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

News image
சிவகாசி: தடைசெய்யப்பட்ட நெகிழிப்பையைத் தயாரித்த ஆலைக்கு சீல்
Updated On :28 டிசம்பர் 2021, 7:29 am

DIN

சிவகாசி அருகே தடைசெய்யப்பட்டுள்ள நெகிழிப்பை தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சிவகாசி வட்டாட்சியர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஸ்டேட் பாங்க் காலனி கோபிநாத் என்பவருக்கு சொந்தமான நெகிழிப்பை தயாரிக்கும் ஆலை செங்கமலநாச்சியார்புரம் உள்ளது தமிழக அரசு நெகிழிப் பைகளை தடை விதித்துள்ளது .

இந்நிலையில் இந்த ஆலையில் கடந்த 17ஆம் தேதி விருதுநகர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர் ஆய்வில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது தெரியவந்தது .

இதையடுத்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட இந்த ஆலையில் மீண்டும் நெகிழிப் பைகள் தயாரிக்கும் பணி நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் அந்த ஆலையில் திங்கட்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் சீல் வைக்கப்பட்டிருந்த ஆலையின் பின் வாசல் கதவினை திறந்து தடை செய்யப்பட்டுள்ள நெகிழிகள் தயாரிப்பது தெரியவந்ததை அடுத்து அந்த ஆலை மீண்டும் சீல் வைக்கப்பட்டது. சிவகாசி வட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பையைத் தயாரிக்க கூடாது என்றும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.