நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலையில் கிடந்த பணத்தை காவல்துறையில் ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு

விழுப்புரம் அருகே சாலையில் கிடந்த ரூ.21,700 பணத்தை காவல்துறையிடம்   ஒப்படைத்த எட்டாம் வகுப்பு மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

News image

விழுப்புரம்: சாலையில் கிடந்த பணத்தை காவல்துறையில் ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு

Updated On :3 பிப்ரவரி 2021, 9:46 am

DIN

விழுப்புரம் அருகே சாலையில் கிடந்த ரூ.21,700 பணத்தை காவல்துறையிடம்   ஒப்படைத்த எட்டாம் வகுப்பு மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் மகன் குமரகுரு (14). இவர் அங்கு உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

புதன்கிழமை காலை தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதற்காக சுங்கச்சாவடி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்கு சென்றார்.

அப்போது சாலையோரம் கீழே கிடந்த ரூபாய் நோட்டுகள் எடுத்து பார்த்தபோது அதில் 21 ஆயிரத்து 700 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

பணத்தை தவற விட்டவர்கள் யார் என்று தெரியாததால், அதனை எடுத்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்று, போலீசில் ஒப்படைக்குமாறு அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரது தாயார் ஹேமலதாவை அழைத்துக்கொண்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அந்த தொகையை ஒப்படைத்தார்.

சிறுவனின் நற்குணத்தை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், அவரைப் பாராட்டி சால்வை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வாழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.