அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஞாயிறன்று பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், வரும் 14-ம் தேதி காலை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். சென்னையில் பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.

News image
ஞாயிறன்று பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
Updated On :12 பிப்ரவரி 2021, 7:05 am

DIN


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், வரும் 14-ம் தேதி காலை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். சென்னையில் பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க சுமார்  ஒரு லட்சம் பேர் வருகை தருவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

எனவே, சென்னையில் அந்த நேரத்தில் சுமார் 5 ஆயிரம் வாகனங்கள் வரக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிக்கல் இல்லை. பிரதமர் வருகையின் போது சென்னையின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். குறிப்பாக காமராஜர் சாலை, பூவிருந்தமல்லி சாலையில், சென்டிரல் ரயில் நிலையத்துக்கு முன்பு வரை மற்றும் அண்ணா சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, வரும் 14 -ஆம் தேதி சென்னை வர உள்ளாா். சென்னை வரும் அவா், பல்வேறு அரசு திட்டங்களைத் தொடக்கி வைக்கிறாா். மேலும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், பிரதமா் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பிப்ரவரி 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணிக்கு தில்லியிலிருந்து புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி.

பிறகு, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி 11.15 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தும், மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், மதியம் 1.35 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படுகிறார். சென்னையிலிருந்து புறப்பட்டு கேரள மாநிலம் கொச்சி செல்கிறார். அங்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் நிறுவனத்தின் புதிய ஆலையை தொடங்கி வைக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.