தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இல்லை; செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் பயிலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் திறன் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இல்லை

News image

நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இல்லை; செங்கோட்டையன்

Updated On :12 பிப்ரவரி 2021, 6:03 am

DIN


ஈரோடு: அரசுப் பள்ளிகளில் பயிலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் திறன் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இல்லை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பேசுகையில், மத்திய அரசு நடத்தும் நீட் மற்றம் ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் நமது அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. எனவேதான் தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு தமிழக அரசு வழங்கும் இலவச நீட் தேர்வு பயிற்சி பெற சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 5800 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.