மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெரம்பலூர் அருகே தனியார் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் அருகே தனியார் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான பருத்தி மற்றும் மக்காச்சோளம் எரிந்து சேதமடைந்தன.

News image
சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் எரியும் பருத்தி மூட்டைகள்.
Updated On :24 பிப்ரவரி 2021, 7:46 am

DIN

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் அருகே தனியார் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான பருத்தி மற்றும் மக்காச்சோளம் எரிந்து சேதமடைந்தன.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கிராமம் அருகே, சிறுகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் (52) என்பவருக்குச் சொந்தமான பருத்தி மற்றும் மக்காச்சோள சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றைத் தரம் பிரித்து, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்தக் கிடங்கில் புதன்கிழமை மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பருத்தி மற்றும் மக்காசளம் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்த கிடங்கில் சுமார் ரூ. 10 கோடி மதிப்பிலான பருத்தி, மக்காச்சோளம் எரிந்து நாசமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இங்கு பணிபுரிந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பாடாலூர் காவல்துறை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.