சென்னை: அதிமுகவை மீட்டெடுப்போம், டிடிவி தினகரனை முதல்வர் அரியணையில் அமர வைப்போம் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் அமமுக செயற்குழு, பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.
10 இடங்களில் கணொலியில் நடந்த அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அமமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுவில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முதல்வர் அரியணையில் அமர வைக்க அயராது பாடுபடுவோம், அதிமுகவை மீட்டெடுக்கவும் அயராது உழைக்க வேண்டும் என செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதரக் கட்சிகளுடனான கூட்டணியை முடிவு செய்ய பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.