ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் பல்வேறு சங்கத்தினர் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன்படி, வியாழக்கிழமை அதிகாலை முதல் விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விழுப்புரம் திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி உள்பட பல்வேறு பணிமனையில் இருந்து பேருந்துகள் பேருந்து நிலையங்களுக்கு செல்லவில்லை. பணிமனைகளிலேயே அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.