இத்தகைய சூழலில் வலுக்கட்டாயமாக அப்பகுதி மக்களை சென்னைக்கு வெளியே குடியமர்த்தி அம்மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கு பாதகம் விளைவிக்காமல், புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் குடியமர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் மாநில துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை நேரடியாக சந்தித்து மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளக்கங்கள், உரிய ஆவணங்கள் ஆதாரங்களுடன் உள்ளடக்கிய கோரிக்கை மனுவை பரிசீலித்து உடன் நடவடிக்கை எடுப்பதாக துணை முதல்வர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.