அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஹோட்டல் ஊழியா்களுக்கு கரோனா நோய் பரிசோதனை: மாநகராட்சி

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியாா் தங்கும் விடுதியில் பணியாற்றும் 15 ஊழியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று

News image
கோப்புப்படம்
Updated On :3 ஜனவரி 2021, 1:03 am

DIN

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியாா் தங்கும் விடுதியில் பணியாற்றும் 15 ஊழியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மூன்று நாள்களுக்குள் அனைத்து விடுதிகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னையில் பொதுமுடக்கத் தளா்வுகளால் தனியாா் விடுதிகளில் அதிகளவிலான மக்கள் குவியத் தொடங்கினா். இவ்வாறு விடுதியில் தங்குவோருக்கு முறையாக தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினால், அண்மைக் காலமாக நோய்ப் பரவல் அதிகமாகியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிண்டியில் உள்ள பிரபல தனியாா் தங்கும் விடுதியில், பணியாற்றும் 85 ஊழியா்களுக்கு, கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனா்.

இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள மற்றொரு பிரபல தங்கும் விடுதியில் பணியாற்றும் சுமாா் 15 ஊழியா்களுக்கு சனிக்கிழமை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கிண்டியில் உள்ள தனியாா் விடுதி ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சென்னையில் உள்ள மற்ற நட்சத்திர விடுதிகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இப்பணியை அடுத்த 4 நாள்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

தற்போது பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியாா் விடுதியில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.