டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தேங்காய்ப்பால் சாயனம்

பொங்கல் ஸ்பெஷலில் இதுவும் ஒன்று. 

News image
Updated On :7 ஜனவரி 2021, 5:50 am

DIN

தேவையானவை:

அரிசி மாவு  -  கால் கிண்ணம்
கெட்டி  தேங்காய்ப்பால் மற்றும்
நீர்த்த தேங்காய்ப்பால்  - தலா  1 கிண்ணம்
நெய் -  2 தேக்கரண்டி
பொடித்த வெல்லம் -  1 கிண்ணம்
பொடியாக  நறுக்கிய  தேங்காய் -   2 தேக்கரண்டி

செய்முறை:  

வாணலியில்   நெய்விட்டு,  தேங்காய்த்  துண்டுகளைச்   சேர்த்து, சிவக்க வறுத்து   எடுத்துக் கொள்ளவும்.  அதே  வாணலியில்,  நெய் சேர்த்து அத்துடன் அரிசி மாவை சேர்த்து,   வாசனை வரும்வரை  நன்கு  வறுக்கவும். 

பின்னர், நீர்த்த  தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர், கெட்டி தேங்காய்ப்பால்,  வெல்லம்  சேர்த்து   கொதிக்க வைக்கவும். எல்லாமாக  சேர்த்து நன்கு கொதித்து  வரும்போது,  அடுப்பை  அனைக்கவும் வறுத்து வைத்துள்ள தேங்காய்த்  துண்டுகளைச்  சேர்த்து பரிமாறவும். சுவையான சாயனம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.