அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், தென்னாம்பட்டினம் கிராமத்தில், திருவாலி ஏரியின் திருநகரி வாய்க்கால் மற்றும் நாட்டுக்கண்ணி- மண்ணியாறு சங்கமத்தின் கீழே, தென்னாம்பட்டினம் மற்றும் பெருந்தோட்டம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் 9 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் நீர் உட்புகாவண்ணம் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி; விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கல்குறிச்சி கிராமத்தில், பந்தனேந்தல் கண்மாய்க்கு நீர் வழங்க குண்டாற்றின் குறுக்கே 10 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 791.97 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில் அணைக்கட்டு கட்டும் பணி; மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சாத்தங்குடி கிராமம் அருகே தெற்காற்றின் குறுக்கே, 2 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சாத்தங்குடி மற்றும் கண்ணுக்குளம் கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள 19 கிணறுகளுக்கு நீர் செறிவூட்டி, 293.18 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில் தடுப்பணை அமைக்கும் பணி; மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், திரளி கிராமம் அருகே கவுண்டா நதியின் குறுக்கே, 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திரளி மற்றும் அதனை சுற்றியுள்ள 40 கிணறுகளுக்கு நீர் செறிவூட்டி 368.01 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில் தடுப்பணை அமைக்கும் பணி; என மொத்தம் 24 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத் துறையின் திட்டப் பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.