டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நீரொழுங்கி, அணைக்கட்டு, தடுப்பணைகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

நீர்வள ஆதாரத் துறை சார்பில் மயிலாடுதுறை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் நீரொழுங்கி, அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

News image
நீரொழுங்கி, அணைக்கட்டு, தடுப்பணைகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
Updated On :8 ஜனவரி 2021, 10:33 am

DIN

பொதுப் பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் மயிலாடுதுறை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் நீரொழுங்கி, அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று (8.1.2021) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 24 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீரொழுங்கி, அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும் தமிழக அரசு, நீர்வள ஆதாரத் துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், தென்னாம்பட்டினம் கிராமத்தில், திருவாலி ஏரியின் திருநகரி வாய்க்கால் மற்றும் நாட்டுக்கண்ணி- மண்ணியாறு சங்கமத்தின் கீழே, தென்னாம்பட்டினம் மற்றும் பெருந்தோட்டம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் 9 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் நீர் உட்புகாவண்ணம் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி; விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கல்குறிச்சி கிராமத்தில், பந்தனேந்தல் கண்மாய்க்கு நீர் வழங்க குண்டாற்றின் குறுக்கே 10 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 791.97 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில் அணைக்கட்டு கட்டும் பணி; மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சாத்தங்குடி கிராமம் அருகே தெற்காற்றின் குறுக்கே, 2 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சாத்தங்குடி மற்றும் கண்ணுக்குளம் கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள 19 கிணறுகளுக்கு நீர் செறிவூட்டி, 293.18 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில் தடுப்பணை அமைக்கும் பணி; மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், திரளி கிராமம் அருகே கவுண்டா நதியின் குறுக்கே, 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திரளி மற்றும் அதனை சுற்றியுள்ள 40 கிணறுகளுக்கு நீர் செறிவூட்டி 368.01 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில் தடுப்பணை அமைக்கும் பணி; என மொத்தம் 24 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத் துறையின் திட்டப் பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் க. சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், நீர்வள ஆதாரத் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.