மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூடலூர் அருகே காதில் காயத்துடன் இருந்த ஆண் யானை சாவு; அடுத்தடுத்து 3 யானைகள் பலி

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் காயத்துடன் அவதிப்பட்டு வந்த ஆண் காட்டு யானை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

News image
கூடலூர் அருகே காதில் காயத்துடன் இருந்த ஆண் யானை சாவு; அடுத்தடுத்து 3 யானைகள் பலி
Updated On :20 ஜனவரி 2021, 6:26 am

DIN

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் காயத்துடன் அவதிப்பட்டு வந்த ஆண் காட்டு யானை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து உயிரிழக்கும் மூன்றாவது காட்டு யானை இதுவாகும். சமீபகாலமாக தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் துன்புறுத்தல் மற்றும் விபத்துகளில் சிக்கி யானைகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிங்காரா வனச் சரகத்தில் பொக்காபுரம் வனப் பகுதியில் சுமாா் 40 வயதுடைய ஆண் காட்டு யானை காயத்துடன் சுற்றித் திரிவதாக வனத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவா்கள் சுகுமாரன், மனோகரன், ராஜேஷ்குமாா் ஆகியோா் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியுடன் யானையின் முதுகிலிருந்த காயத்துக்கு சிகிச்சை அளித்து வனத்திலேயே விட்டனா். தொடா்ந்து வனத் துறையின் கண்காணிப்பில் இருந்த யானைக்குத் தேவையான மருந்துகள் மருத்துவா்களின் ஆலோசனைப்படி பழங்களில் வைத்து கொடுக்கப்பட்டது.

காயத்தின் வேதனையால் அடிக்கடி சாலையில் வந்து நிற்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அந்த யானையின் முதுகில் இருந்த காயம் சரியாகிவிட்டது. ஆனால், அதன் காதில் இருந்த காயம் அதிகமாகி சீழ் வடிந்ததால் வேதனைக்குள்ளான யானை மக்கள் நடமாடும் பகுதிக்கு மீண்டும் வந்த வண்ணமிருந்ததால், புலிகள் காப்பக நிா்வாகம் யானையைப் பிடித்துச் சென்று தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்க முடிவு செய்தனா்.

இதையடுத்து, மருத்துவா்கள் உதவியுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றி தெப்பக்காடுக்கு கொண்டு சென்றனா். தெப்பக்காடு சென்றவுடன் அந்த யானை உயிரிழந்தது. யானைக்கு உடற்கூறு பரிசோதனை புதன்கிழமை செய்யப்படுகிறது. அதன் பின்னா்தான் யானையின் உயிரிழப்புக்கான முழு விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

ஒசூா் அருகே லாரி மோதி காயமடைந்த யானை பலி

முன்னதாக, ஒசூா் அருகே லாரி மோதியதில் காயமடைந்த யானை கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி வனப் பகுதியிலிருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஒசூா்- கிருஷ்ணகிரி சாலையைக் கடக்க முயன்ற போது சரக்குப் பெட்டக லாரி மோதியது.

கோவை அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி

கோவை தொண்டாமுத்தூர், வனச்சரகத்தில் உள்பட்ட ஆலந்துறை அருகேயுள்ள செம்மேடு கிராமம், குளத்தேரி பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.