பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜன.26-இல் கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யவில்லை: தமிழக அரசு  

குடியரசு நாளான ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து அரசு  இன்னும் முடிவு செய்யவில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

News image
ஜன.26-இல் கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யவில்லை: தமிழக அரசு
Updated On :22 ஜனவரி 2021, 12:32 pm

DIN

சென்னை: குடியரசு நாளான ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து அரசு  இன்னும் முடிவு செய்யவில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ததை எதிர்த்து திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் முதன்மை செயலாளருமான கே.என். நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இதே போன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் மௌரியா,  தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள கிராமசபைக் கூட்டங்களை மீண்டும் நடத்த ஊரக வளர்ச்சித்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி தனித்தனியாக வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், மீண்டும் கிராமசபைக் கூட்டம் வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடத்தப்பட வேண்டும். எனவே அதற்கு முன்பே வழக்கை விசாரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், வரும் ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து அரசு  இன்னும் முடிவு செய்யவில்லை. கரோனா சூழலை கருத்தில் கொண்டு கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுமா என்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என தெரிவித்தார். 

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.