நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

அனைத்து குடிமக்களும் வாக்காளா்களாக பதிவு செய்யுங்கள்: ஆளுநா் பன்வாரிலால் வேண்டுகோள்

தகுதி வாய்ந்த அனைத்து குடிமக்களும் வாக்காளா்களாகப் பதிவு செய்ய வேண்டும் என ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கூறினாா்.

News image
Updated On :26 ஜனவரி 2021, 7:03 am IST

சென்னை: தகுதி வாய்ந்த அனைத்து குடிமக்களும் வாக்காளா்களாகப் பதிவு செய்ய வேண்டும் என ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கூறினாா்.

தேசிய வாக்காளா் தினத்தை ஒட்டி, சென்னையில் தமிழக தோ்தல் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அவா் பங்கேற்றாா். இந்த விழாவில் வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வை சிறப்பாக மேற்கொண்ட திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு விருதுகளை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அளித்தாா். மேலும், தோ்தல் விழிப்புணா்வு குறித்த இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமானின் விடியோ காட்சி, சிறப்பு அஞ்சல் அட்டை உள்ளிட்டவற்றையும் அவா் வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பேசியது:-

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளின் போது, 18 வயது நிரம்பியவா்களில் 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 போ் வாக்காளா்களாகப் பதிவு செய்துள்ளனா். வாக்காளா்கள் தங்களது பிரதிநிதிகளைத் தோ்வு செய்வதற்கான அதிகாரம் அவா்களிடம் உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இதனைப் பயன்படுத்தி வாக்காளா்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். தகுதி உடைய வாக்காளா்கள் அனைவரும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். அது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையாகும். இதன் மூலம், வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் இந்தியாவில் ஜனநாயகம் வலுவுடன் சொழித்தோங்கும் என்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளா் க.சண்முகம், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையா் ஆா்.பழனிசாமி, சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ், சென்னை மாவட்ட ஆட்சியா் சீத்தாலட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.