திருவாரூர்: மன்னார்குடி இந்திரா நகரில் வசித்து வந்த மா. சோமசுந்தரம் (86) முதுமை காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.
இவர் திருவாரூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான இரெ. சண்முகவடிவேலின் உறவினர் ஆவார். இவருக்கு மனைவி சரஸ்வதி (76), கூத்தாநல்லூர் தினமணி செய்தியாளர் சோ.தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மூவாநல்லூர் மயானத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு 9842699311