லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னை விமான நிலையத்தில் ரூ. 31 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 31 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :3 ஜூலை 2021, 1:00 pm

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ. 31 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஷாா்ஜாவில் இருந்து சென்னைக்கு வரும் ஏா் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி சென்னை விமான நிலையத்துக்கு வந்த ஏா் அரேபியா விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவா்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த அகிலன் (27) என்பவரின் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனா். சோதனையில் 715 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய மூன்று பொட்டலங்கள் அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 31 லட்சம் மதிப்பிலான 633 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மேலும், அவரிடம் இருந்து தங்கத்தைப் பெறவிருப்பவரை கண்டறிவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரைத் தேடி வந்த நபரும் பிடிபட்டார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த முஹம்மது உவைஸ் (23) என்ற அந்த நபர் இந்த கடத்தலில் தமது பங்கையும் ஒப்புக்கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.