கம்பம்: தேனி மாவட்டம் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெ.அழகேசன் கரோனா தொற்றால் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் அழகேசன் (50). இவர் சிறப்பு சார்பு ஆய்வாளராக நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்தார்.
மனைவி பரிமளா (41), மகள் நிகிதா(19), மகன் பாலாஜி (14), ஆகியோருடன் கம்பத்தில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த ஜூன் 30-ல் கரோனா பரிசோதனை எடுத்தார். ஜூலை 2-ல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் ஜூலை 4 ல் உத்தமபாளையம் அருகே உள்ள கரோனா தனிமை சிகிச்சை மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.
ஜூலை 8-ல் மூச்சுத்திணறல் காரணமாக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி திங்கள் கிழமை உயிரிழந்தார்.
உடல் அடக்கம் சொந்த ஊரான குள்ளப்பகவுண்டன்பட்டியில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. 21 குண்டுகள் முழங்க காவலர் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநிலங்களவைத் தேர்தலில் ஜேடியு-பாஜக கூட்டணி வெற்றி பெறும்: பிகார் அமைச்சர்!

தேர்தல் நடத்தை விதி அமல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி!

கார்த்திக் சுப்புராஜ் - ராணா டகுபதி தயாரிப்பில் இலங்கை தமிழர் இயக்கிய புதிய படம்!

பேரவைத் தேர்தல்! 3 மணி நேர மலையேற்றம்; 5 வாக்காளர்கள் கொண்ட தேனி வாக்குச்சாவடி!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

