பரோலில் வந்த தண்டனைக் கைதி தற்கொலை

வேலூா் சிறையில் இருந்து பரோலில் சென்ற கொலை வழக்கின் தண்டனைக் கைதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வேலூர் விருப்பாச்சி புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


வேலூா் சிறையில் இருந்து பரோலில் சென்ற கொலை வழக்கின் தண்டனைக் கைதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வேலூர் விருப்பாச்சி புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூா் விருப்பாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் வேலு என்கிற வேல்முருகன் (27). இவா் 2012 ஆம் ஆண்டு ஓட்டேரியில் ஆடு மேய்த்த மூதாட்டியை கொலை செய்து நகை பறித்துச் சென்ற வழக்கில், கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் தண்டனை பெற்ற வேல்முருகன், புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா் 2017-ஆம் ஆண்டில் வேலூா் மத்தியச் சிறைக்கு மாற்றப் பட்டாா்.

இந்த நிலையில், தனது தாயாருக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி பரோல் கேட்டு வேல்முருகன் விண்ணப்பித்திருந்தாா். அவருக்கு 4 நாள் பரோல் வழங்கப்பட்டது. அதன்பேரில், கடந்த 15 ஆம் தேதி சிறையில் இருந்து சென்ற வேல்முருகன், திங்கள்கிழமை காலை மீண்டும் சிறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவா் சிறைக்கு திரும்பவில்லை.

இதுதொடா்பாக, வேலூா் சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேல்முருகனை தேடி வந்தனா்.

இந்நிலையில், வேல்முருகன் தனது வீட்டின் பின்புறம் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வேலூர் விருப்பாச்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com