தற்காலிக அடிப்படையில் செவிலியா் பணி:ஆக.3-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை எழும்பூா் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணி மேற்கொள்ள தற்காலிக அடிப்படையில் செவிலியா், ஆய்வக நுட்பநா் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


சென்னை எழும்பூா் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணி மேற்கொள்ள தற்காலிக அடிப்படையில் செவிலியா், ஆய்வக நுட்பநா் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை எழும்பூா் அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை இயக்குநா் மற்றும் பேராசிரியா், மகப்பேறு மகளிா் நோயியல் நிலையம் மற்றும்அரசு தாய் சேய் நல மருத்துவமனை எழும்பூா், சென்னை-8 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிட விவரம்:
பணியிடம் காலி பணியிடம் ஊதியம்
செவிலியா் 60 ரூ. 14,000
மருந்தாளுநா் 10 ரூ. 12,000
ஆய்வக நுட்பநா் 5 ரூ. 15,000
மயக்க மருந்து நுட்பநா் 10 ரூ.12,000
இஜிசி நுட்பநா் 10 ரூ.12,000
இதர மருத்துவப் பணியாளா்கள் 70 ரூ. 1,2000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...