தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிளஸ் 2 பொதுத்தேர்வு: இரு நாள்களில் முடிவு என அமைச்சர் தகவல்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக அனைவரிடமும் கருத்து கேட்டு 2 நாள்களில் முடிவு எடுக்கப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

News image
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Updated On :2 ஜூன் 2021, 6:32 am

DIN

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக அனைவரிடமும் கருத்து கேட்டு 2 நாள்களில் முடிவு எடுக்கப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் உள்பட அனைவரிடமும் அடுத்த 2 நாள்களுக்கு கருத்துகள் கேட்கப்படும் என்றும்,

கருத்துக்களின் அடிப்படையில் பொதுத்தேர்வை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று (ஜூன்2) காலை ஆலோசனை நடைபெற்றது. 

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது,

மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக கருத்து கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மருத்துவ வல்லுநர்கள் உள்பட அனைவரிடமும் அடுத்த 2 நாள்களுக்கு கருத்துகள் கேட்கப்படும்.

பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் பொதுத்தேவை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுத்தேர்வு குறித்து அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கும் வகையில் மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண் விரைவில் அறிவிக்கப்படும். பிற மாநிலங்கள் எடுக்கும் நிலைப்பாடு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டும் முடிவு எடுக்கப்படும்.

மேலும், தேர்வை விட மாணவர்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் முக்கியம் என்று ஆலோசனையின்போது முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.