மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரை: வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நிவாரணப் பொருள்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. 

News image
மானாமதுரை வின்சன்ட் நகரில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி அவர்களது குறைகளை கேட்டறிந்தார் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி
Updated On :7 ஜூன் 2021, 12:19 pm

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. 

மானாமதுரை கிழக்கு ஒன்றியம் செய்களத்தூர் கிராமத்திலும் வின்சென்ட் நகரிலும் ஏராளமான ஏழை மக்கள் பிழைப்பு நடத்த வழியின்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்களை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மானாமதுரை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் துரை.ராஜாமணி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முத்துச்சாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.