47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சசிகலாவுடன் உரையாடிய 15 பேர் நீக்கம்: அதிமுக

​சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :14 ஜூன் 2021, 12:22 pm

DIN


சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டனர். பொருளாளர், துணை கொறடா, செயலாளர் உள்ளிட்ட தேர்வும் நடைபெற்றன.

மேலும், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அனைவரும் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும், எதிர்வரும் காலத்தில் யாரேனும் உரையாடினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 பேரும் கட்சியிலியிருந்து நீக்கப்பட்டனர்.

இதுதவிர அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி மற்றும் தேனி மீனவர் பிரிவு துணைச் செயலர் ஏ.கே.எம். அழகர்சாமி ஆகியோரும் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.