தற்போது, கூத்தாநல்லூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும், ஆரம்ப சுகாதார நிலையம் போலவே இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவர்கள் காலை 9 மணிக்கு வந்து விட்டு, மதியத்துடன் போய்விடுகின்றனர். அதன்பிறகு மருத்துவர் இல்லா மருத்துவமனையாகத்தான் இயங்குகிறது. இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை. அதன்பிறகு செவிலியர்கள்தான் சிகிச்சையளிக்கின்றனர். சிகிச்சைக்காக எந்த நோயாளி போனாலும், மன்னார்குடி, திருவாரூர் மருத்துவமனைக்குப் போகச் சொல்லி அனுப்புகிறார்கள். அறுவை சிகிச்சை அரங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. 24 படுக்கைகள் இருக்க வேண்டிய மருத்துவமனையில், பாதியளவு படுக்கைகள்தான் உள்ளன. பிரசவ மருத்துவர், எலும்பு முறிவுக்கு, கண் நோய்க்கு என தனித்தனி மருத்துவர்கள் இல்லை. கர்ப்பிணியின் வயிற்றில் சிசு வளர்ச்சியை தெரிந்துகொள்ள ஸ்கேன் வசதி கிடையாது. தைராய்டு பரிசோதனை கிடையாது. சர்க்கரை வியாதிக்கு தேவையான மருந்தும் கிடையாது. என எதைக் கேட்டாலும் இல்லை என்ற பதில்தான் வருகிறது.