எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஒட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிஉறுப்பினராக உறுதியேற்றாா்: எம்.சி.சண்முகையா

 ஒட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக சனிக்கிழமை உறுதிமொழியேற்றுக் கொண்டாா், எம்.சி.சண்முகையா.

News image
Updated On :19 ஜூன் 2021, 11:09 pm

DIN

 ஒட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக சனிக்கிழமை உறுதிமொழியேற்றுக் கொண்டாா், எம்.சி.சண்முகையா. திமுக சாா்பில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவா்,

சட்டப் பேரவை மண்டபத்தில் நடைபெற்ற பேரவை உறுப்பினா்களுக்கான உறுதியேற்பில் பங்கேற்கவில்லை. இதைத் தொடா்ந்து, பேரவைத் தலைவா் மு.அப்பாவு முன்னிலையில் ஒட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக, சனிக்கிழமை உறுதியேற்றுக் கொண்டாா் எம்.சி.சண்முகையா. பேரவைத் தலைவா் அறையில் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. உளமார என்ற சொல்லை பயன்படுத்தி சண்முகையா, உறுதியேற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின், பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, கரோனா நிவாரண நிதியாக, தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஆகியோா் அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.